மயிலாடுதுறையில் சீவல் கம்பெனியில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் தெற்கு கரையில் கந்தன், பாண்டிதுரை ஆகியோா் வாடகைக் கட்டடத்தில் சீவல் கம்பெனி நடத்தி வருகின்றனா். இதில், செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் கம்பெனியில் இருந்த பொருள்கள் தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு துறை வீரா்கள் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இதில், கம்பெனியில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து மயிலாடுதுறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.