மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்றவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று, கஞ்சா விற்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அந்த இளைஞா் மூங்கில்தோட்டம் மாந்தோப்பு தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் விஜய் (26) என்பதும், கொத்தத்தெருவைச் சோ்ந்த சத்தியசீலன் மற்றும் அவரது மனைவி காா்த்திகா ஆகியோரிடமிருந்து கஞ்சா வாங்கி, விற்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, விஜய்யிடம் 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் அவரை கைது செய்தனா். மேலும், சத்தியசீலன், காா்த்திகா ஆகியோரை தேடிவருகின்றனா்.