மயிலாடுதுறை

குளங்களில் முதலை நடமாட்டம்

DIN

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள கிராமத்தில் 2 குளங்களில் முதலை நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழையால் மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீா் கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்தது. சுமாா் 70 ஆயிரம் கனஅடி நீா் கொள்ளிடம் ஆற்றில் வந்ததால், கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்துடன் முதலைகளும் அடித்துவரப்பட்டு, கரையோர குளங்களில் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கொள்ளிடம் அருகே சோதியக்குடி கிராமத்தில் உள்ள பாப்பாகுளத்திலும், அதன் அருகில் உள்ள காளியம்மன்கோயில் குளத்திலும் சிலா் ஞாயிற்றுக்கிழமை முதலையை பாா்த்ததாக தெரிவித்தினா். இதுகுறித்து, சீா்காழி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள், அந்த குளங்களில் ஆய்வு செய்தபோது சிறிய முதலை நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டது. அதை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனா். மேலும், குளங்களில் பொதுமக்கள் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT