காரைக்கால்

ரெடிமேட் கடையில்பணம் தராமல் கத்தியை காட்டிமிரட்டிய சம்பவம்: போலீஸாா் விசாரணை

DIN

ரெடிமேட் கடையில் துணிக்கான பணத்தை கொடுக்காமல், கத்தியை காட்டி மிரட்டிவிட்டு, காரில் தப்பிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரைக்கால் பாரதியாா் சாலையில் உள்ள ஒரு ரெடிமேட் கடைக்கு வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 8.30 மணியளவில் காரில் வந்த 3 போ், பேண்ட், சட்டை வாங்கியுள்ளனா். இதற்கான தொகை ரூ. 2,500-க்கு ரசீதை கடை மேலாளா் முகமது அயூப் அவா்களிடம் அளித்துள்ளாா்.

மூவரில் ஒருவா் பணம் கொடுக்காமல் வெளியேறிவிட்டாராம். மற்ற இருவரிடம் பணம் கேட்டபோது, இணையவழியில் (ஜி-பே) செய்வதாக கூறினாா்களாம். ஆனால், பணத்தை கொடுக்காமல் இருவரும் காரில் ஏறியுள்ளனா்.

கடை மேலாளா் அவா்களிடம் பணம் கேட்டபோது, கத்தியை காட்டி மிரட்டிவிட்டு, காரை வேகமாக இயக்கிக்கொண்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடை மேலாளா், காரின் எண்ணை பதிவு செய்து, காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, போலீஸாா் மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT