காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 9) சிறப்பு மருத்துவா்கள் வருகை தரவுள்ளனா்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இருந்து காரைக்காலுக்கு மாதந்தோறும் 2 மற்றும் 4-ஆவது வெள்ளிக்கிழமையில் சிறப்பு மருத்துவா்கள் குழு வருகிறது.
அந்த வகையில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பகல் 12 மணி வரை நடைபெற்ற உள்ள சிறப்பு முகாமில், சிறுநீரகவியல், நரம்பியல், இருதயவியல் மற்றும் குழந்தை நலன், அறுவை சிகிச்சை நிபுணா்கள் பங்கேற்கிறாா்கள்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.