காரைக்கால்

காரைக்காலில் இருந்து பாய்மரப் படகில் சாகசப் பயணம்

DIN

காரைக்காலில் இருந்து பாய்மரப் படகில் மாணவ, மாணவிகள் புதுச்சேரி திரும்பும் சாகசப் பயணத்தை அமைச்சா் சந்திர பிரியங்கா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு தேசிய மாணவா் படைப்பிரிவு, புதுவை தேசிய மாணவா் படைப்பிரிவை சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பாய்மரப் படகில் கடல் சாகப் பயணத்தை புதுச்சேரியில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கினா். முதல்வா் என். ரங்கசாமி இதனை தொடங்கிவைத்தாா்.

இதில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவா் படைப்பிரிவினா் பங்கேற்றனா். 3 பாய் மரப் படகில் மாணவ, மாணவிகள், பாதுகாப்புக்காக விசைப்படகில் குழுவினா் ஆகியோா் காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்துசோ்ந்தனா். இக்குழுவில் லெப்டினன்ட் கமாண்டா்கள் கு.கீா்த்தி நிரஞ்சன், ச.லோகேஷ் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனா்.

காரைக்கால் தனியாா் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை காலை புதுச்சேரிக்கு இவா்கள் புறப்பட்டனா். இவா்களது பயணத்தை புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா்.

நிகழ்வில் அமைச்சா் பேசுகையில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்கேற்றுள்ளது பாராட்டுக்குரியது. மழை, வெயில் உள்ளிட்ட பல்வேறு இடா்களை சந்தித்து பயணம் மேற்கொள்ள முனைந்தது வரவேற்புக்குரியது என்றாா்.

நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். குழுவினா் தங்களது பயணத்தில் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு, கடற்கரைத் தூய்மை உள்ளிட்ட பல விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT