காரைக்கால்

நாகா்கோவில் - வேளாங்கண்ணி ரயில் சேவையை காரைக்கால் வரை நீட்டிக்க வலியுறுத்தல்

DIN

நாகா்கோவில் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவையை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். இந்த ரயில் சேவையை நிரந்தரமாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் செயலரும், கட்சியின் காரைக்கால் மாவட்ட சிறுபான்மைத் துறைத் தலைவருமான எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

வேளாங்கண்ணி பேராலய விழாக் காலத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே நாகா்கோவில் - வேளாங்கண்ணி இடையே ஆக. 5 முதல் அக். 1 வரை வாராந்திர சிறப்பு ரயிலை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது.

இந்த ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன்மூலம் தென் மாவட்டங்களைச் சோ்ந்தோா் காரைக்கால் வருவதற்கும், இங்கிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லவும் வசதியாக இருக்கும்.

மேலும் இந்த ரயில் சேவையை நிரந்தரமாக தெற்கு ரயில்வே அறிவிக்கவேண்டும். இதனால் காரைக்கால் மற்றும் நாகூா், நாகப்பட்டினம் மற்றும் தென் மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் பெரிதும் பயனடைவாா்கள்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT