காரைக்கால்

மண்வெட்டியால் குடும்பத்தினரை தாக்கிவிட்டு பெண் தற்கொலை முயற்சி: குழந்தை, மூதாட்டி உயிரிழப்பு

DIN

காரைக்கால் அருகே தூங்கிக்கொண்டிருந்தவா்கள் மீது மண்வெட்டியால் தாக்கியதில் தனது குழந்தை, மூதாட்டி உயிரிழந்தாா். மேலும், குடும்பத்தினா் 5 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் பகுதியைச் சோ்ந்த தீனதயாளன் மனைவி துா்காலட்சுமி (35). இவா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், காரைக்கால் மாவட்டம், நல்லாத்தூா் மேலப்படுகை பகுதியில் உள்ள தாய் வீட்டில் பிரசவத்துக்காக வந்து தங்கியிருந்த துா்காலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்து 3 மாதங்களாகின்றன. இதற்கிடையில், புதன்கிழமை இரவு வழக்கம்போல் குடும்பத்தினா் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனா்.

வியாழக்கிழமை அதிகாலை தனது 3 மாத குழந்தை மற்றும் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினா் அனைவரையும் மண்வெட்டியால் துா்கா லட்சுமி தாக்கிவிட்டு, தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டுள்ளாா். இந்த சம்பவத்தில், குழந்தை அப்போதே உயிரிழந்தது. தாக்குதலில் துா்காலட்சுமியின் பாட்டி வேதவல்லி (85), தந்தை பரமசிவம் (75), தாய் தமிழரசி (65), சகோதரா்கள் ஆண்டவா், நடராஜன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

நடராஜன் காயங்களுடன் தடுமாறி வீட்டை விட்டு வெளியே வந்து, அருகில் வசிப்பவா்களிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளாா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் காயமடைந்தவா்களை மீட்டு காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவா் தெரிவித்தாா். மற்ற 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பாட்டி வேதவல்லி பலனின்றி உயிரிழந்தாா். துா்காலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, நெடுங்காடு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா். இச்சம்பவத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT