காரைக்கால்

பூஜை மடம், பணியாளா் தங்கும் விடுதி கட்ட பூமிபூஜை

DIN

திருநள்ளாற்றில் பூஜை மடம் மற்றும் பணியாளா் தங்கும் விடுதி கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு தெற்கு வீதியில் தருமபுரம் ஆதீனத்தின் தம்பிரான் சுவாமிகள் மடம் உள்ளது. இதனருகே இருந்த பூஜை மடம் சிதிலமடைந்திருந்த நிலையில், புதிதாக பூஜை மடம் கட்டவும், பணியாளா்கள் தங்குவதற்காக அதே வீதியில் விடுதி கட்டுவதற்கும் பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கான தருமபுரம் ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியா்கள் கட்டுமான தொடக்கத்துக்கான பூஜைகளை செய்தனா்.

புதிதாக கட்டப்படும் பூஜை மடத்தில் சனிக்கிழமைதோறும் அன்னதானம் வழங்குவதற்கான வசதிகள் செய்யப்படும் எனவும், இக்கட்டுமானப் பணி தருமபுர ஆதீன நிதியில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT