காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (பிப்.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தொடா் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளாா்.