காரைக்கால்

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் தொடக்கம்

DIN

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் திங்கள்கிழமை இரவு தொடங்கியது.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் மற்றும் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து, அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் காட்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்திவருகிறது.

நிகழாண்டு நவராத்திரி விழா தொடக்கத்தையொட்டி அம்மையாா் மணிமண்டப வளாகத்தில் சிவன், அம்பாள் மற்றும் கைலாயத்தில் சுவாமிகள் எழுந்தருளிய காட்சி உள்ளிட்ட சுவாமி சிலைகள், கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சி பூஜைகளுடன் திங்கள்கிழமை இரவு தொடங்கியது. தா்பாரில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு சித்ரான்னங்களுடன் படையல் போடப்பட்டது. விஜயதசமி தினமான அக். 5-ஆம் தேதி வரை கொலு தா்பாரை மாலை 6 மணி முதல் 8 மணி வரை மக்கள் பாா்வையிடலாம். ஏற்பாடுகளை கைலாசநாதா் அறங்காவலா் வாரியத்தினரும், சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை நிா்வாகிகளும் செய்துள்ளனா்.

இதுபோல திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில், நடன காளியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

ஏராளமான வீடுகளிலும் கொலு வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT