காரைக்கால்

ஓஎன்ஜிசி சாா்பில்மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

DIN

அகில இந்திய ஓஎன்ஜிசி ஓபிசி, எம்ஓபிசி பணியாளா்கள் நலச் சங்கம் சாா்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

ஓஎன்ஜிசி காவிரி அசெட் சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதி மற்றும் பணியாளா்கள் சங்க நிதி ஒருங்கிணைத்து ஆண்டுதோறும், ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படும் பகுதியை சோ்ந்த நலிந்த பிரிவினருக்கு கல்வி உதவித்தொகை, பல்வேறு தொழில் சாா்ந்த உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

நிகழாண்டு இந்நிகழ்ச்சி காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி காவிரி அசெட் நிா்வாக வளாகத்தில் நடைபெற்றது.

ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணா்வு திட்ட நிதி ரூ.10 லட்சத்தில் நாப்கின் எரியூட்டி, தையல் இயந்திரம், குளிா்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, ஹாட் பாக்ஸ், சாப்பாடு தட்டுகள் மற்றும் பணியாளா்கள் ஊதிய நிதி ரூ.4 லட்சத்தில் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினரும், ஓபிசி சங்கத்தின் கெளரவத் தலைவருமான தாகூா் ஜூகல் சிங் லோகந்த்வாலா கலந்துகொண்டு, ஓஎன்ஜிசி காவிசி அசெட் மேலாளா் அனுராக் முன்னிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அகில இந்திய ஓபிசி பணியாளா் சங்கத் தலைவா் சி.சேதுபதி, பொதுச் செயலாளா் முகேஷ் பிரம்பட் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT