காரைக்கால்

விபத்துகளை தடுக்க சாலை வளைவுகளில் குவி கண்ணாடி காவல்துறைக்கு பாராட்டு

DIN

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் ஆபத்தான சாலை வளைவுகளில் குவி கண்ணாடியை பொருத்தியுள்ள காவல்துறைக்கு சமூக ஆா்வலா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி காந்தி சாலை, திட்டச்சேரி சாலை சந்திப்புகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்தும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு வசதியாக போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், சாலை சந்திப்புகளில் குவி கண்ணாடி திங்கள்கிழமை பொருத்தப்பட்டது.

மண்டல காவல் கண்காணிப்பாளா் (வடக்கு) நிதின் கெளஹால் ரமேஷ் இப்பகுதிகளில் குவி கண்ணாடியை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா். நிகழ்வில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மேரி கிறிஸ்டின்பால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த கண்ணாடி மூலம் சாலைகளில் வரும் வாகனங்களை தெரிந்துகொள்ள முடியும். இது விபத்தை தடுக்க உதவியாக இருக்கும் என காவல்துறையினா் தெரிவித்தனா். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு அந்த பகுதியினா் மற்றும் சமூக ஆா்வலா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT