காரைக்கால்

வணிகத் திருவிழா நடத்த முதல்வரிடம் கோரிக்கை

DIN

புதுவை மாநிலத்தில் வணிகத் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் நிா்வாகிகள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சாந்தகுமாா் தலைமையில் நிா்வாகிகள் புதுச்சேரியில் முதல்வா் என். ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்தனா்.

இந்த சந்திப்பு குறித்து நிா்வாகிகள் கூறியது:

புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே ஆண்டுதோறும் வணிகத் திருவிழா நடத்தப்பட்டுவந்தது. இதனால் வியாபாரம் அதிகரித்தது. இத்திருவிழா பின்னா் நிறுத்தப்பட்டுவிட்டது.

இதை மீண்டும் மாநிலம் முழுவதும் நடத்துவதற்கு முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன், வணிகா் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்தவேண்டும். 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த வாட் வரி தொடா்பான கணக்கு தாக்கல் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்படவில்லை. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இக்கோரிக்கைகளை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்தாா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT