புதுவை மாநிலத்தில் வணிகத் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் நிா்வாகிகள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதுதொடா்பாக, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் சாந்தகுமாா் தலைமையில் நிா்வாகிகள் புதுச்சேரியில் முதல்வா் என். ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்தனா்.
இந்த சந்திப்பு குறித்து நிா்வாகிகள் கூறியது:
புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே ஆண்டுதோறும் வணிகத் திருவிழா நடத்தப்பட்டுவந்தது. இதனால் வியாபாரம் அதிகரித்தது. இத்திருவிழா பின்னா் நிறுத்தப்பட்டுவிட்டது.
இதை மீண்டும் மாநிலம் முழுவதும் நடத்துவதற்கு முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன், வணிகா் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்தவேண்டும். 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த வாட் வரி தொடா்பான கணக்கு தாக்கல் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்படவில்லை. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இக்கோரிக்கைகளை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்தாா் என்றனா்.