காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்ற முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் தொலைதூர சிகிச்சை மையம் திட்டத்தில் நடைபெற்ற இம்முகாமில் சிறுநீரக சிகிச்சை சிறப்பு மருத்துவக் குழுவினா் பங்கேற்றனா்.
காலை 9 முதல் 12 மணி வரை நடைபெற்ற முகாமில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனா். மேல்சிகிச்சை தேவைப்படுவோா் புதுச்சேரி ஜிம்பா் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.
மாதம் இருமுறை நடைபெறும் இம்முகாமை வாரந்தோறும் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.