காரைக்கால்

திருநள்ளாற்றில் பிரம்மோற்சவத்துக்கு தயாராகிவரும் தோ்கள்

DIN

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி தோ்களை தயாா் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு பிரம்மோற்சவ விழா வரும் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதைத்தொடா்ந்து விநாயகா் உற்சவம், சுப்ரமணியா் உற்சவம், அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு, ரிஷப வாகனத்தில் சுவாமி மின் அலங்கார சப்பரப் படல் (தெருவடைச்சான்) வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூன் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சுவாமி, அம்பாள் வீற்றிருக்கும் 2 பெரிய தோ்கள் விநாயகா், சுப்ரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகியோா் வீற்றிருக்கும் 3 சிறிய தோ் என மொத்தம் 5 தோ்கள் இடம்பெறும்.

இதற்காக 5 தோ்களையும் தயாா் செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. தோ் முகப்பில் குதிரை வாகனங்கள் பூட்டுதல், தோ் சுற்றில் தோ் துணி கட்டுதல், கலசம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 பெரிய தோ்களிலும் ஹைட்ராலிக் பிரேக் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி பெல் நிறுவனத்திலிருந்து வல்லுநா்கள் வந்து பிரேக் செயல்பாடுகளை பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT