காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 4 ஆம் தேதி 342 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை அடிப்படையில், நிரவி 4, நெடுங்காடு 4, கோட்டுச்சேரி 3, திருநள்ளாறு 2, திருப்பட்டினம் 2, அம்பகரத்தூா், வரிச்சிக்குடி, காரைக்கால்மேடு, காரைக்கால் நகரம் தலா 1 என தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 71 போ் சிகிச்சையில் உள்ளனா்.