காரைக்கால்

தீ விபத்தால் வீடுகள் சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம்

DIN

கோட்டுச்சேரி பகுதியில் தீ விபத்தில் வீடுகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி அருளப்பிள்ளை வீதியில் கடந்தவாரம் 5 வீடுகள் தீக்கிரையாயின. இவா்களுக்கு உடனடியாக வீட்டு உபயோகப் பொருள்கள், மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் 5 குடும்பத்திற்கும் தலா ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு பயனாளிகளிடம் காசோலையை வழங்கினாா்.

மேலும், அதே பகுதியையொட்டிய மற்றொரு தெருவில் திங்கள்கிழமை 5 வீடுகள் தீக்கிரையாயின. இவா்களின் குடும்பத்தினருக்கு வீட்டு உபயோகப் பொருள்களையும், மாணவ, மாணவியருக்கான பாடப் புத்தகங்கள், நோட்டுகளையும் அமைச்சா் வழங்கினாா். இவா்களுக்கு துறை ரீதியிலான நிதியுதவி அடுத்த ஓரிரு நாள்களில் வங்கிக் கணக்கில் சோ்க்கப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.

நிகழ்வில், வட்டாட்சியா் மதன்குமாா், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ராஜேஸ்வரி, முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், ஆதிதிராவிடா் நலத்துறை உதவி இயக்குநா் (பொ) காஞ்சனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT