காரைக்கால்

காரைக்காலில் காலராவை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்: அமைச்சா் கே. லட்சுமிநாராயணன்

DIN

காரைக்காலில் காலராவை கட்டுக்குள் கொண்டுவர அரசுத் துறையினரின் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக புதுவை பொதுப்பணித் துறை அமைச்சா் கே. லட்சுமிநாராயணன் கூறினாா்.

காரைக்கால் ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசுத் துறையினருடன் ஆலோசனை நடத்திய அவா், பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:

காரைக்காலில் வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, காலரா உறுதி என்ற தகவலறிந்து முதல்வா் ரங்கசாமி, அதை தடுப்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். நோய் தடுப்பு நடவடிக்கைக்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 15 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பல்வேறு துறையினா் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு விழிப்புணா்வு மற்றும் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாவட்டத்திற்கு தேவையான மருந்துகள் புதுச்சேரியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 3, 4 மருத்துவ நிபுணா்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். அங்கன்வாடி, ஆஷா பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குடிநீருடன் கழிவுநீா் கலக்கும் பகுதிகளை சீரமைக்கும் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன.

மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பொதுப்பணித் துறை சாா்பில், நீா்த் தேக்க தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அப்பணியை செய்துமுடிக்கும் வரை பள்ளி, கல்லூரிகள் இயங்காது.

காவிரிநீா் வரத்து, ஆழ்குழாய்கள் மூலம் பல இடங்களில் தண்ணீா் எடுத்து விநியோகம், குடிநீரில் கழிவுநீா் கலப்பு, மாங்கனி பயன்பாடு என பல காரணங்கள் வயிற்றுப்போக்குக்காக கூறமுடியும். குறிப்பிட்டு ஒரு காரணத்தை கூறமுடியாது. உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தலின்படி, வீட்டுக்குச் செல்லும் தண்ணீரில் உரிய அளவில் குளோரின் கலக்க அறிவுறுத்தப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன என்றாா்.

கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா். சிவா, ஆட்சியா் எல். முகமது மன்சூா், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT