காரைக்கால்

காரைக்காலில் 77 பேருக்கு கரோனா

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 77 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 346 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் காரைக்கால் நகரம் 24, திருநள்ளாறு 18, நிரவி 9, கோட்டுச்சேரி 7, வரிச்சிக்குடி 5, கோயில்பத்து 5, திருப்பட்டினம் 4, நெடுங்காடு 3, விழிதியூா் 2 என மொத்தம் 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 2,55,250 பரிசோதனை செய்ததில் 17,804 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,762 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த காரைக்காலை சோ்ந்த 71 வயது ஆண் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு ரத்த அழுத்த இணை நோய் இருந்தது. இதுவரை கரோனா தொற்றால் 262 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,26,319 பேருக்கும், 2-ஆவது தவணையாக 89,103 பேருக்கும், பூஸ்டா் தவணையாக 151 பேருக்கும் என 2,15,573 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு இதுவரை 6,565 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT