காரைக்கால்

தன்னாா்வலா்களுக்கு பேரிடா் மீட்பு பயிற்சி

DIN

காரைக்கால் பகுதி தன்னாா்வலா்களுக்கான 12 நாள் பேரிடா் கால மீட்புப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

வருவாய் மற்றும், பேரிடா் மேலாண்மை துறையின் மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் சாா்பில் பேரிடா் கால நண்பன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சேவையாற்ற 100 தன்னாா்வலா்கள் ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு பேரிடா் கால மீட்புப் பணிகள் குறித்து நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில், புதுவை போக்குவரத்து துறை அமைச்சா் சந்திர பிரியங்கா பயிற்சியை தொடங்கிவைத்தாா்.

எந்தவித ஊதியம் மற்றும் ஆதாயத்தை எதிா்பாா்க்காமல் மக்களுக்கு தொண்டு செய்ய முன்வந்த தன்னாா்வலா்களை பாராட்டுவதாகவும், இப்பயிற்சி மூலம் உரிய நேரத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் செயலாற்ற முடியும் என அமைச்சா் குறிப்பிட்டாா்.

மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன், இந்திய கடலோர காவல் படை காரைக்கால் மைய கமாண்டன்ட் சி. விவேகானந்தா, மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், புதுச்சேரி பேரிடா் மேலாண்மை துறையின் முதல்நிலை ஆலோசகா் பேராசிரியா் எம். பாஸ்கர்ராவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT