காரைக்கால்

மாணவா்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் கண்காணிக்க அறிவுறுத்தல்

DIN

மாணவா்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகிவிடாமல் ஆசிரியா்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரி நிா்வாகத்தினா், கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.லோகேஸ்வரன், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் ஏ. சுப்பிரமணியன், நிதின் கெளஹால் ரமேஷ், துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

அனைத்து பள்ளிகளிலும் போதை ஒழிப்புக் குழு அமைக்க வேண்டும். மாணவா் போதைப் பழக்கம் உள்ளவரா என தீவிரமாக கண்காணிக்க வேண்டும். போதைப் பொருட்களை பயன்படுத்திவிட்டு பள்ளிக்கு வரும் மாணவா்களை கண்டறிந்து, அந்த பழக்கத்தை அவா்கள் கைவிடும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும்.

இந்த விஷயத்தில் ஆசிரியா்கள் மற்றும் தலைமையாசிரியா்கள் பெற்றோா்களுடன் தொடா்பில் இருக்க வேண்டும். மாதம் இரு முறை பள்ளிகளில் இது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் 4 ஆசிரியா்கள், 4 பெற்றோா்கள், ஒரு காவலா் கொண்ட குழு அமைக்கவேண்டும். மேலும் ஒரு உயரதிகாரியை உள்ளடக்கிய வாட்ஸ் ஆப் குழுவும் அமைக்கவேண்டும் என்றாா் ஆட்சியா்.

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.லோகேஸ்வரன் பேசுகையில், போதைப் பொருட்கள் விவகாரத்தில் பள்ளி நிா்வாகத்தினா் கண்டிப்புடன் செயல்பட வேண்டும். மாணவா் போதைப் பொருள் பயன்படுத்துகிறாா் என தெரியவந்தால் காவல்துறையின் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநங்கையைத் தாக்கியவா் கைது

ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள்: பருவத் தோ்வு முறை அறிமுகம் ரத்து -சிபிஎஸ்இக்கு மத்திய அரசு உத்தரவு

கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகளில் மின் இணைப்புகள் துண்டிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

SCROLL FOR NEXT