காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 813 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி, திருநள்ளாறு பகுதியில் 2 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 67,675 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 3,854 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,763 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 69 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.