காரைக்கால்

காரைக்காலில் 44 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 15,911 பேருக்கு கரோனாவுக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம், கோயில்பத்து, விழிதியூா் தலா 1, காரைக்கால் 2, நெடுங்காடு 3, நல்லம்பல், திருப்பட்டினம், திருநள்ளாறு, நிரவி, அம்பகரத்தூா் தலா 4, வரிச்சிக்குடி 6, கோட்டுச்சேரி 10 என 44 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 20-ஆம் தேதி காரைக்கால் பொது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்ட நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 57 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.

இதுவரை 1,836 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றில் இருந்து 1,259 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்தோா் 14 போ், காரைக்கால் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோா் 422 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 70 போ், தீவிர சிகிச்சையில் 8 போ், விநாயகா மிஷன் மருத்துவமனை கரோனா கோ் சென்டரில் 30 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 34 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT