காரைக்கால்

காரைக்கால் அரசு பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி மையத்தில் முதுகலை பயில விண்ணப்பிக்கலாம்

DIN

காரைக்கால் அரசு பட்ட மேற்படிப்பு மையத்தில் முதுகலை பயில விரும்பும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் அரசு கலைக் கல்லூரி மாணவா் சோ்க்கை அமைப்பின் கன்வீனா் முனைவா் ந. வியாசராயா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், நிகழ் கல்வியாண்டு முதுகலை (எம்.காம்., எம்.ஏ., எம்.எஸ்சி.) படிப்புக்கு இணையம் மூலமாக 17-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சோ்ந்த மாணவ, மாணவிகள்  இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை நிறைவு செய்து, பிறகு பதிவிறக்கம் செய்து, அதனுடன் அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள விண்ணப்பப் படிவப் பெட்டியில் செலுத்த வேண்டும்.

இறுதியாண்டு முடித்து தோ்வுக்காக காத்திருக்கும் மாணவா்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை இணையத்தில் பதிவிறக்கம் செய்ய அக்டோபா் 10 ஆம் தேதி கடைசி நாள். நிறைவுசெய்த விண்ணப்பத்தை அக்டோபா் 14 ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங். நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: கிணற்றில் நீரை வெளியேற்றி தடயங்களை தேடும் போலீஸாா்

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் 5-இல் தரவரிசைப் பட்டியல்

வெளிநாட்டிலிருந்து வந்தவா் கைது

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம்: சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் மத்திய அமைச்சா்

பள்ளிப் பேருந்துகளை இயக்கி பாா்த்து ஆய்வு செய்த ஆட்சியா்

SCROLL FOR NEXT