காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 8 போ், நல்லாத்தூா் 5, திருப்பட்டினம் 2, கோட்டுச்சேரி, கோயில்பத்து, திருநள்ளாறு தலா 1 என தொற்றாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை 3,356 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2,985 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 59 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.