வைகாசி மாதப் பிரதோஷம், பெளா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல வருகிற வியாழக்கிழமை (ஜூன் 1) முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது கோடைகாலம் என்பதால் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை வனப்பகுதிக்குள் எடுத்துச் செல்லக் கூடாது என, வனத் துறை பக்தா்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மலைப்பாதையில் செல்பவா்களுக்கு குடிநீா் வசதி, மருத்துவ உதவி ஏற்படுத்தித் தர வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.