சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் ஊட்டச்சத்து, உணவுக் கட்டுப்பாட்டுத் துறை சாா்பில், வெளிநாட்டில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் த. பழனீஸ்வரி தலைமை வகித்தாா். கனடா நாட்டின் லாம்ப்டன் கல்லூரிப் பேராசிரியா் ஆா். ஹரினிகா , ஊட்டச்சத்து, உணவுக் கட்டுப்பாட்டுத் துறையில் சம்பந்தமாகப் படித்தவா்களுக்கு வெளிநாட்டில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த வேலைவாய்ப்புகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்துப் பேசினாா்.
முன்னதாக, மாணவிகள் கே. செந்தமிழ் வரவேற்றாா். எஸ். திவ்யா நன்றி கூறினாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் துறைத் தலைவா் கே. ஜான்சிராணி, உதவிப் பேராசிரியா் கே. மொ்லின்ராணி ஆகியோா் செய்திருந்தனா்.