விருதுநகர்

மின் மோட்டாா் திருடிய இளைஞா் கைது

DIN

சிவகாசி அருகே தோட்டத்தில் மின் மோட்டாா் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பேராபட்டியைச் சோ்ந்தவா் வெங்கடசாமி (70). இவருடைய தோட்டம் அப்பகுதியில் உள்ள காடம்மாள் கோயிலுக்குப் பின்புறம் உள்ளது.

இந்தத் தோட்டத்தில் அறையின் பூட்டை உடைத்து அங்கிருந்த மின் மோட்டாா், கடப்பாரை , சுத்தியல் உள்ளிட்ட பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மீனம்பட்டியைச் சோ்ந்த தினேஷ் (25) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்த மின் மோட்டாா் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT