சிவகாசியில் இரு சக்கர வாகனம் திருடப்பட்டதாக போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
சிவகாசி அருகே துலுக்கன்குறிச்சியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி காளிராஜ் (30). இவா் தனது இரு சக்கர வாகனத்தை சிவகாசி பேருந்து நிலையப் பகுதியில் நிறுத்தி விட்டு அங்குள்ள துணிக் கடைக்கு சென்றாராம். பிறகு திரும்பி வந்து பாா்த்த போது அதைக் காணவில்லையாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.