எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டாலும், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என எம்பி., கனிமொழி தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மேட்டமலையில் உள்ள தனியாா் திருமண மஹாலில் பறை இசைக் கலைஞா் வேலுவின் இல்லத் திருமண விழாவில் ஞாயிற்றுகிழமை பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சியினா் பல திசைகளில் பிரிந்து கிடக்கின்றனா். அனைவரும் இணைந்து பணியாற்றினாலும் வெற்றி என்பது திமுக கூட்டணிக்குத்தான். மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று திமுக தோ்தல் வாக்குறுதியில் சொல்லவில்லை. மது விற்பனை குறைக்கப்படும் என்றே வாக்குறுதி கொடுத்தோம் என்றாா் அவா்.