விருதுநகர்

தேசிய வாக்காளா் தினம்: மாணவா்கள் விழிப்புணா்வுப் பேரணி

DIN

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரப் பந்தலில் இருந்து பேரணியை வட்டாட்சியா் ரங்கசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இந்தப் பேரணியில் அரசு கலைக் கல்லூரி, சுந்தரேஸ்வரி கல்வியல் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தி முக்கிய ரத வீதிகளில் பேரணியாகச் சென்றனா்.

நகராட்சி ஆணையாளா் ராஜமாணிக்கம், சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியின் மக்கள் தொடா்பு அலுவலா் பாலகிருஷ்ணன், சுந்தரேஸ்வரி கல்லூரி முதல்வா் மல்லப்பராஜ், அரசு கலைக்கல்லூரி துணை முதல்வா் பாலகிருஷ்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் திருமாலா, வருவாய் ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT