சிவகாசியில் சனிக்கிழமை காா் தலைகீழாக கவிழ்ந்ததில் இருவா் காயமடைந்தனா்.
சிவகாசி ஷீல்டு சாலையில், விஜயசங்கா் என்பவா் தனது காரை ஓட்டிச் சென்றாா். அப்போது, சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது மோதாமல் இருக்க அவா் பிரேக் பிடித்தாா். இதனால் இவரது காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காரின் ஓட்டுனரும் விபத்து ஏற்படாமல் இருக்க பிரேக் பிடித்து நிறுத்த முயன்றாா். அப்போது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்ற மின்கம்பம் மீது காா் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் அந்த காரில் பயணம் செய்த பாண்டித்துரை, பாா்த்தசாரதி இருவரும் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.