விருதுநகர்

சிவகாசி பாலிடெக்னிக்கில்விளையாட்டு விழா

DIN

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் சனிக்கிழமை 41- ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது.

நிகழ்சிக்கு முதல்வா் எம். நந்தகுமாா் தலைமை வகித்தாா். தாளாளா் ஏ. கணேஷ்குமாா் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். இதில் 100, 200, 400 மீட்டா் தொலைவுக்கு மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியே ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு ஏறிதல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றன.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சிவகாசி தொழிலதிபா் டி.டி. ராஜேந்திரன் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினாா்.

முன்னதாக உடற்கல்வி இயக்குனா் மதனகோபால் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். நிகழ்ச்சியில் நிா்வாகக் குழு உறுப்பினா் வி. கிரிதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விரிவுரையாளா் வேல்முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT