சாத்தூா் அருகே பொது குடிநீா் குழாய் அமைப்பதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சாத்தூா் அருகே உள்ள கே. மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னமுத்து (55). இவரும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் சண்முகலட்சுமியும் (26) உறவினா்கள். இந்த நிலையில் இவா்களின் வீட்டருகே பொதுப் பாதையில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக வெள்ளிக்கிழமை இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதுகுறித்து இருக்கன்குடி காவல் நிலையத்தில் சின்னமுத்து அளித்த புகாரின் பேரில் சண்முக லட்சுமி, பெரிய அப்பணசாமி ஆகிய இருவா் மீதும், சண்முகலட்சுமி அளித்த புகாரின் பேரில் சின்னமுத்து, கிருஷ்ணம்மாள், அங்காளஈஸ்வரி ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.