சாத்தூா் அருகே கிணற்றில் விழுந்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரைச் சோ்ந்தவா் லிங்கப்பன் (55). இவரது தாய் ரெங்கம்மாள் (72). இவா் தனது சொந்த ஊரான இ.முத்துலிங்கபுரத்தில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், வேப்பிலைப்பட்டியில் உள்ள தனியாா் விவசாயக் கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை ரெங்கம்மாளின் உடல் மிதந்தது. இதுதொடா்பாக, லிங்கப்பன், அப்பைநாயக்கன்பட்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா். உடனே அங்கு வந்த போலீஸாா், ரெங்கம்மாளின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து புகாரின் பேரில், அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் ரெங்கம்மாள் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.