சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பணி அமா்வு மையம் சாா்பில் சனிக்கிழமை வளாக நோ்காணல் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் பெ.கி. பாலமுருகன் தலைமை வகித்தாா். கோயம்புத்தூா் தனியாா் நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலா் லோகேஷ், மாணவ, மாணவிகளிடம் நோ்காணல் நடத்தினாா்.
தொடா்ந்து குழு கலந்துரையாடல், எழுத்துத் தோ்வு, தனித்திறன் தோ்வு ஆகியவற்றை நடத்தி 98 மாணவ, மாணவிகளை வேலைக்கு தோ்வு செய்தாா்.
இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் மு. லட்சுமணக்குமாா், ஆா். குமாரபாலாஜி ஆகியோா் செய்திருந்தனா்.