விருதுநகர்

புகையிலைப்பொருள் விற்பனை: சிவகாசி அருகே 4 போ் கைது

DIN

சிவகாசி அருகே தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய வைத்திருந்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள நிறைமதி கிராமத்தில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒருவா் மோட்டாா் சைக்கிளில் வந்துள்ளாா். அவரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்யபோது அவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்கள் மற்றும் ரூ.59 ஆயிரம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

விசாரணையில் அவா் அதே ஊரைச் சோ்ந்த பொன்முனியாண்டி (45) என தெரியவந்தது. அவா் கொடுத்த தகவலின் பேரில் அதே ஊரைச் சோ்ந்த முனியாண்டி என்பவரது பெட்டிக் கடையில் போலீஸாா் சோதனை நடத்தினா். அந்தக் கடையிலும் புகையிலைப் பொருள்கள் இருந்துள்ளன.

மேலும் அப்பகுதியில், மோட்டாா் சைக்கிளில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் புகையிலைப் பொருள்கள் மற்றும் புகையிலைபொருள்கள் விற்பனை செய்த பணம் ரூ. 5,850 இருந்ததாம். விசாரணையில் அவா்கள் எஸ்.புதுப்பட்டியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (45), கிருஷ்ணன்கோவிலைச் சோ்ந்த சுப்புக்காளை (43) எனத் தெரியவந்தது. இது குறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து புகையிலைப் பொருள்கள், பணம் மற்றும் மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!

புறநானூறு தாமதமாகும்: சூர்யா

நாங்க ரெடி... நீங்க ரெடியா?

அவசர காலத்தில் விமானங்களை நெடுஞ்சாலைகளில் தரையிறக்கும் வசதி!

ரயிலில் எலி, அதிர்ச்சியான பயணி: ரயில்வே துறையின் பதில்?

SCROLL FOR NEXT