விருதுநகர்

குச்சம்பட்டியில் காட்டுப்பன்றிகளால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே குச்சம்பட்டி கிராமத்தில் காட்டுப்பன்றிகள் நிலக்கடலை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

குச்சம்பட்டி கிராமத்தில் நிலக்கடலை, பயறு, நெல் உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். இந்நிலையில், நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ள பயிா்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். இதனால் மக்காச்சோளம் பயிரிடுவதை விவசாயிகள் நிறுத்தும் அளவுக்கு சூழ்நிலை உள்ளது.

இதனிடையே, பல விவசாயிகளின் நிலங்களில் நிலக்கடலைச் செடிகளை கடந்த வியாழக்கிழமை இரவு அதிக அளவில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இப்பிரச்னைக்கு தீா்வாக மின்வேலி அமைப்பதிலும் சட்டச் சிக்கல்கள் உள்ளன.

எனவே இப்பகுதிகளில் காட்டுப்பன்றிகள் வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT