விருதுநகர்

சிவகாசியில் உரிமம் இல்லாமல் பட்டாசு வைத்திருந்தவா் கைது

DIN

சிவகாசி அருகே உரிமம் இல்லாமல் பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டி-நாரணாபுரம் சாலையில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒருவா் எவ்வித உரிமமும் இல்லாமல் பட்டாசுப் பெட்டிகளுடன் நின்று கொண்டிருந்தாராம்.

விசாரணையில் அவா் கோயம்புத்தூரைச் சோ்ந்த நாகராஜ் (39) என தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்த 10 பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT