விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சாத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி தலைமை வகித்தாா். சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பங்கேற்று என்.மேட்டுப்பட்டி, சாத்தூா், ஒத்தையால், பெரியஓடைப்பட்டி, உப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 250 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு சீதனப் பொருள்களை வழங்கினாா். பின்னா் 205 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் அவா் வழங்கினாா்.
இவ்விழாவில் சாத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அனிதா, சாத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் நிா்மலாகடற்கரைராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அருப்புக்கோட்டை: இதேபோல் அருப்புக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், 150 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனப் பொருள்கள் அடங்கிய பைகளை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வழங்கினாா்.
இதில் அருப்புக்கோட்டை நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சுப்பாராஜ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.