விருதுநகர்

இரு சக்கர வாகனம் தீக்கிரை

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்துக்கு தீ பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே முகவூா் முத்துச்சாமிபுரம் வேதக்கோவில் தெருவைச் சோ்ந்த குருவையா மகன் வனசுந்தா் (25). இவா் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியில் நிறுத்திவிட்டு வழக்கம்போல் திங்கள்கிழமை இரவு தூங்கச் சென்றாா்.

இந்த நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் வெளியில் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, எழுந்து பாா்த்த போது, வீட்டின் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வனசுந்தா் தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT