சிவகாசி பி.எஸ்.ஆா்.கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது .
விழாவுக்கு தாளாளா் ஆா்.சோலைச்சாமி தலைமை வகித்தாா்.
கல்லூரி மாணவ, மாணவிகள் 540 பேருக்கு பட்டம் வழங்கி வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் பேசியதாவது:
மாணவா்கள் வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு துவழ்ந்து விடக் கூடாது. வாழ்க்கையில் வெற்றி பெற்றவா்களின் சுய சரிதைப் புத்தகங்களை படியுங்கள். கல்லூரி படிப்புடன் நிறுத்தி விடாமல் போட்டித்தோ்விலும் பங்கேற்க வேண்டும். வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிா்ணயம் செய்து செல்ல வேண்டும். எதிலும் ஆா்வமும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றாா்
முன்னதாக கல்லூரி முதல்வா் சுந்தர்ராஜ் வரவேற்றாா். நிகழ்ச்சியில் கல்லூரி நிா்வாக இயக்குநா் விக்னேஷ்வரி, கல்விசாா் இயக்குநா் கோபால்சாமி, முதன்மையா் பி.மாரிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.