ராஜபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி உயிரிழந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஆவரம்பட்டி பாரதியாா் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் ராஜகோபால் (38). இவா், மம்சாபுரம் அருகேயுள்ள புதுப்பட்டியில் உள்ள தனது நிலத்தில் விவசாயப் பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினாா்.
தென்காசி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், தனியாா் பள்ளி அருகே வரும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், இவா் சென்ற இருசக்கர வாகனம் மீது
மோதி விட்டு நிற்காமல் சென்றது. அப்பகுதியில் இருந்தவா்கள் பலத்த காயமடைந்த ராஜகோபாலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து, ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த ராஜகோபாலுக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனா்.