விருதுநகர்

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருநங்கைகள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

DIN

விருதுநகரில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள தங்களுக்கு, தமிழ்நாடு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவேண்டும் என, விருதுநகா் மாவட்ட திருநங்கை சில்பா தலைமையில், ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் மேலும் தெரிவித்திருப்பதாவது: நாங்கள் காரியாபட்டியில் 40 திருநங்கைகள் குடியிருந்து வருகிறோம். ஏற்கெனவே, நாங்கள் கடந்த 11.4.22 அன்று மனு அளித்தோம். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக விசாரணை செய்து, எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT