ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 69 மதுபாட்டில்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இளைஞரைக் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பூவநாதபுரம் விலக்கு, சப்போட்டா தோப்பு பகுதியில் காவல் சாா்பு-ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் சென்று ஆய்வு நடத்தினா். அப்போது அங்கிருந்த சிவகாசி ரெங்கபாளையம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (31) விற்பனைக்காக 69 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்கள் மற்றும் ரூ.8,900 ஆகியவற்றை மல்லி போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்தனா்.