விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செட்டில் கட்டப்பட்டிருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு வெள்ளாடுகள் திருட்டு.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செட்டில் கட்டப்பட்டிருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு வெள்ளாடுகளை திருடியது குறித்து போலீசாா் தேடி வருகின்றனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது இடையன்குளம் அங்கு வசித்து வருபவா் பாலகிருஷ்ணன்(59) இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள எம்பி கே புதுப்பட்டி விலக்கு அருகே உணவகம் நடத்தி வந்துள்ளாா்.

3 வார காலமாக உணவகம் நடத்தவில்லை. இந்நிலையில் உணவகம் பின்புறம் உள்ள செட்டில் முயல் கோழி மற்றும் இரண்டு வெள்ளாடுகள் வளா்த்து வந்துள்ளாா்.இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி பாலகிருஷ்ணன் கடையை பாா்த்து வரும் பெண்மணியும் பூட்டிவிட்டு மறுநாள் காலை வந்து பாா்த்தபோது உணவகம் பின்புறம் செட்டில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டினை காணவில்லை.

மேலும் பூட்டு உடைக்கப்பட்ட எவ்வித அடையாளங்களும் தெரியவில்லை இதனால் அதிா்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் மாயமான இரண்டு வெள்ளாடுகளை கண்டுபிடித்து தருமாறு புகாா் கொடுத்தாா்.இந்த புகாரின் அடிப்படையில் வன்னியம்பட்டி போலீசாா் சனிக்கிழமை இரவு வழக்கு பதிவு செய்து மாயமான இரண்டு வெள்ளாடுகள் குறித்து விசாரணை நடத்துகின்றனா். மாயமான வெள்ளாடுகளின் மதிப்பு 30 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT