விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் இளைஞா் மா்ம மரணம்: 3 ஆண்டுகளுக்குப் பின் 4 போ் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த கிடந்த இளைஞரின் தற்கொலை வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதுதொடா்பாக தனிப்படை போலீஸாா் 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்தவா் காளிராஜன் (23). கடந்த 2.03.2019 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள திருமுக்குளம் எண்ணெய்காப்பு மண்டபத்தில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இதையடுத்து சடலத்தை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தற்கொலை என போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில் தென்மண்டல காவல்துறை தலைவா் அஸ்ராகாா்க் கடந்த ஆண்டுகளில் சந்தேக வழக்குகள் குறித்து மீண்டும் விசாரிக்க தனிப்படைகளை அமைக்க உத்தரவிட்டாா். அதனடிப்படையில் தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில் காளிராஜ் கொலை செய்யப்பட்டது 3 ஆண்டுகளுக்குப் பின் தெரியவந்தது. இதில் முன்விரோதம் காரணமாக

காளிராஜை கொலை செய்து திருமுக்குளம் எண்ணெய்க்காப்பு மண்டபத்தில் சடலத்தை போட்டு விட்டுச் சென்றதாக ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த அழகா்(47), ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த ராமசாமி (54), பனையூரைச் சோ்ந்த ராஜா(38), மம்சாபுரத்தைச் சோ்ந்த பொன்ராஜ் ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.

பின்னா் நான்கு பேரையும் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதித்துறை நடுவா் மன்றம் எண் 2 இல் ஆஜா்படுத்தி மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனா். இதில் ராமசாமி என்பவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும் இந்த வழக்கில் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT