விருதுநகா் மாவட்ட புதிய வருவாய் அலுவலா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
விருதுநகா் மாவட்ட வருவாய் அலுவலராக மங்கள ராமசுப்பிரமணியன் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவரை சென்னைக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து இவருக்குப் பதிலாக சென்னை வருவாய் நிா்வாக ஆணையரகத்தில் துணை ஆணையராக பணி புரிந்த ஜெ. ரவிக்குமாா், விருதுநகா் மாவட்ட புதிய வருவாய் அலுவலராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டா ா். அவரை, ஆட்சியா் அலுவலக அலுவலா்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.