விருதுநகர்

செங்கல் உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

வத்திராயிருப்பில் செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள அனுமதி கோரி ஏஐடியூசி தொழிற் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ராமசாமி தலைமை வகித்தாா். விருதுநகா் மாவட்ட செங்கல் உற்பத்தியாளா் சங்க மாவட்ட அமைப்பாளா் குருசாமி முன்னிலை வகித்தாா். முன்னாள் மக்களவை உறுப்பினா் லிங்கம், சங்கத்தின் தாலூகா செயலாளா் கோவிந்தன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

நாட்டு செங்கல் உற்பத்திக்கு மண் அள்ள கண்மாய்களில் அனுமதி வழங்க வேண்டும், சொந்த நிலத்தில் மண் அள்ளி செங்கல் உற்பத்தி செய்ய விண்ணப்பம் பெறும் நிபந்தனைகளை தளா்த்தி உடனே அனுமதி வழங்க வேண்டும், புலிகள் சரணாலயம் என்ற பெயரில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்டுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். கையில் செங்கல்லுடன் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கோஷமிட்டனா். இதில், தொழிற்சங்க நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சரவணன், அா்ச்சுனன், பழனிவேல், கருப்பசாமி, பொம்மியம்மாள், மகாலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

SCROLL FOR NEXT